கூட்டுக்குடும்பத்தில் வாழும் மருமகளின் குரல் எடுபடாததுபோலக் கூடங்குளம் மக்களின் குரலும் எடுபடவில்லை. காரணம் இந்தியப் பிரதமர் கூட்டுக்குடும்பத்தில் வாழும் கணவர்போல எந்த முடிவினையும் சுயமாக எடுக்கஇயலாதவர். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவினையே முன்மொழிவார். இதில் மருமகளின் உரிமையும் உணர்வும் நிராகரிக்கப்படுவதைப்போல மக்களின் உணர்வும் உரிமையும் மதிக்கப்படாது.