பொது இடத்தில் எச்சில் துப்பும் மரபு நம் நாட்டில் மலிந்திருக்கின்றது. இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடு இருப்பதில்லை. வயது வித்தியாசமில்லை. எச்சில் நம் உடலில் உள்ள அத்தனைக் கிருமிகளுக்கும் பரவ உதவும் ஓர் ஊடகம். மருந்தைத் தெளிப்பதைப் போல எச்சிலைத் தெளித்து நோயைப் பரப்பி வருகின்றோம். இனி யாவது இதில் கவனம்கொள்வோம்.